ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இழுத்துக்கோ பறிச்சுக்கோ

கடந்த மூன்று வாரங்களாக இந்தப் பக்கத்தில் எதுவும் எழுத முடியவில்லை. மேலும் சந்தையின் போக்கும் மிக மோசமான அளவிற்கு எழுச்சியும் வீழ்ச்சியும் இருந்தது.

தங்கம் ஒரே நாளில் 600 புள்ளிகள் ஏறுவதும் இறங்குவதும், வெள்ளி 1500 புள்ளிகள் வரை ஏறவும் இறங்கவும் இருந்தது. செப்டெம்பர் மாதம் எப்பொழுதும் வீழ்ச்சியை காணும் தங்கமும், வெள்ளியும் இந்த வருடம் பெரும் எழுச்சியை கண்டது. காரணம் உலக பங்குசந்தையின் மந்த நிலையும், தொழில் வீழ்ச்சியுமே ஆகும். ஸ்திரமான ஆசிய சந்தை கூட இந்த மாதத்தில் தள்ளாடுகிறது. ஆக இதன் எதிரொலியாக தங்கத்திலும், வெள்ளியிலும், காப்பரிலும் முதலீடு அதிகரிக்கிறது.

காப்பர் ஏற வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதனின் தேவை குறைந்துவிட்டது. இந்த நிலையில் தங்கத்தின் மீதான டிமாண்ட் காப்பரிலும் எதிரொலிக்கிறது.


குருடாயில் வர்த்தகத்தை Tug of Warஇல் ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் ரஷ்யா, அரபுநாடுகள், வெனிசுலா போன்றவை மறுபுறமும் இழுக்கின்றன. இதில் சவூதி அரேபியா இருபுறம் நகர்ந்து ஜோக்கர் வேலையை பார்க்கிறது. ஆக குருடாயில் வர்த்தகம் ஒரு கண்ணாமூச்சியை நடத்துகிறது. பகலில் Buy செல்லுங்கள், இரவு 8.20 க்கு மேல் எத்தனை பொசிஷன் இருந்தாலும் வெளியில் வந்துவிடுவது நல்லது.

நேச்சுரல்கேஸ் பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கிறது. தினமும் நாலு புள்ளிகள் நகர்கிறது. உச்சியை தொட்டுவிட்டு கீழே இறங்கும் அல்லது அடியை தொட்டுவிட்டு மேலே ஏறும். நடுவில் Direction மாறாமல் ஒரே திசையில் செல்கிறது

பேஸ் மெட்டல்ஸ் ரெம்பவும் மேலே ஏறாது. ஆக மேலே வரும்போது Sell போவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக